கொலை வழக்கு: 7 பேருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
கோவை:
ஆளைக் கடத்தி கொலை செய்து ஆற்றில் வீசிய வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ., உள்பட 7 பேருக்கு 25 ஆண்டுகாலத் தண்டனைவிதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை மாவட்டம், பொங்கலூரில் பனப்பாளையத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமிக் கவுண்டர். இவருக்கும் இவரது நிலத்திற்கு அருகில்உள்ள தாமோதரசாமி நாயுடுவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் தாமோதரசாமி நாயுடுவுக்கும், கருப்புசாமிக் கவுண்டருக்கும் இடையே ஒரு போட்டி ஏற்பட்டது. இவர்கள் இருவரின்நிலத்திற்கும் அருகில் உள்ள மற்றொரு நிலத்தை விலைபேசினர். இதனை கருப்புசாமிக் கவுண்டர் வாங்கிக் கொண்டார்.
இந்நிலையில் கருப்புசாமிக் கவுண்டர் மகன் முத்துச்சாமி (35), பல்லடம் அருகே மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போதுதமோதரசாமி நாயுடுவின் கும்பல், அவரை மொபட்டிலிருந்து கீழே தள்ளி விட்டு, ஜீப்பில் அவரைக் கடத்திச் சென்றனர். கடத்திச்செல்லப்பட்ட முத்துச்சாமி, 30.11.97ம் தேதி கொலை செய்யப்பட்டு அமராவதி ஆற்றில் தூக்கி வீசப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார், முன்னாள் எம்.எல்.ஏ.,பழனிச்சாமி, தாமோதரசாமி நாயுடுவின் மகன்கள்ராமகிருஷ்ணன், ராஜேந்திரன், ராஜமாணிக்கம், சுந்தரம், மயில்சாமி, முத்துக்கிருஷ்ணன், தங்கத்து, கோவிந்தசாமி ஆகிய 9 பேரைக்கைது செய்தனர்.
இவர்கள் மீது ஆளைக் கடத்தி, கொலை செய்து ஆற்றில் வீசியது தொடர்பாக இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே தங்கமுத்து, கோவிந்தசாமி ஆகிய இருவரும் இறந்து விட்டனர்.
கோவை இரண்டாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பில், கொலை செய்யப்பட்ட குற்றத்திற்காக 7 பேருக்கும் தலா 14ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், பிற வழக்குகளான ஆள் கடத்தல், மற்றும் தடயத்தை மறைத்தல் ஆகியகுற்றங்களுக்காகவும் சேர்த்து 25 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்தவழக்கில் தொடர்புடைய முன்னாள் எம்.எல்.ஏ, பழனிச்சாமி, கிணத்துக் கடவு தொகுதியில் 91ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றவர். தற்போது உழவர் உழைப்பாளர் கட்சியின் பொருளாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications