வி.எச்.பி. தலைவர் மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
கோவை:
விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கல் நெஞ்சுவலி காரணமாக கோவை மருத்துவமனை ஒன்றில்அனுமதிக்கப் பட்டுள்ளார்.
ஆர்ஷ வித்யா குருகுலத்தின் தலைவர் ஸ்ரீ தயானந்த சரஸ்வதியைச் சந்திப்பதற்காக கோவைக்கு அருகேஅணைக்கட்டிக்குச் சென்றபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டார்.
75 வயது அசோக் சிங்கல்லின் உடல் நிலை சீராக இருந்தாலும், தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு தீவிர சிகிச்சைப்பிரிவு மூலம் கண்காணிக்கப் படுவார் என்றும் மேலும் ஒரு வாரத்திற்கு அவர் மருத்துவமனையில் இருக்கநேரிடலாம் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications