ஆயிரம் விளக்கில் ஸ்டாலின் பிரசாரம்
சென்னை:
முதல்வர் கருணாநிதியின் மகனும், சென்னை நகர மேயருமான மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில்புதன்கிழமை வீதி, வீதியாக சென்று ஓட்டு வேட்டையாடினார்.
ஆயிரம் விளக்குத் தொகுதியில் ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விடியல் சேகர்களத்தில் இருக்கிறார். தி.முகவின் கோட்டையாக கருதப்படும் ஆயிரம் விளக்குப் பகுதியில் ஸ்டாலின் தனது பிரசாரத்தைத்தீவிரப்படுத்தியுள்ளார்.
புதன்கிழமை காலை 8 மணிக்கு ஜெமினி மேம்பாலத்திலிருந்து திறந்த ஜீப்பில் வாக்கு கேட்டு பயணத்தைத் தொடங்கினார். 500க்கும்மேற்பட்ட தி.மு.கவினர் அவருடன் பல வாகனங்களில் பின் தொடர்ந்தனர். திடீர் நகர், வாலஸ் கார்டன், ரட்லன் கேட் ஆகியபகுதிகளில் ஸ்டாலின் வாக்கு கேட்டார்.
காதர் நவாஸ்கான் சாலையில் ஏராளமான முஸ்லீம்கள் திரண்டு வந்து ஸ்டாலினுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். அஜீஸ் தெரு,சுதந்திரா நகர் உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சென்று ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
கிம்ஸ் சாலையில் ரோஜா மலர்களை சாலையில் தூவி பொதுமக்கள் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர். பத்தாரி பகுதியில் ஸ்டாலின்கூடியிருந்தவர்களிடையே பேசுகையில், உங்களின் வேட்பாளராக மீண்டும் வந்துள்ளேன். தி.மு.கவின் பொற்கால ஆட்சி தொடர எங்களைஆதரியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications