இப்போது வேண்டாம் யார் முதல்வர் சர்ச்சை: கோவை எம்.எல்.ஏ.
Subscribe to Oneindia Tamil
கோவை:
வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆன பின் முதல்வர் யார் என்பதை முடிவு செய்வோம் என சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகஉள்ள வி.கே லட்சுமணன் தெரிவித்தார்.
கோவையில் நடந்த நிருபர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கோவை கிழக்குத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.,வும் வேட்பாளருமானவி.கே லட்சுமணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கோவை கிழக்குத் தொகுதியின் வளர்ச்சிக்கு நான் பாடுபட்டுள்ளேன். இந்த தொகுதியில் உறுதியாக நான் வெற்றி பெறுவேன். தமிழகமுதல்வர் யார் என்பதை பின்னர் தீர்மானிக்கலாம். இப்போது நான் எம்.எல்.ஏ.,வாக களத்தில் உள்ளேன். வெற்றி பெற்றபின்னர், முதல்வரை தீர்மானிப்பேன்.
தேர்தலிலேயே போட்டியிடாமல் காமராஜர் ஆட்சி அமைக்கவில்லையா? அண்ணாதுரை ஆட்சி அமைக்கவில்லையா? இவர்கள்முதல்வர்கள் ஆகவில்லையா? என்றார் வி.கே லட்சுமணன்.












Click it and Unblock the Notifications