ஊருக்குள் வராதே: எம்.எல்.ஏவுக்கு எதிராக போர்க்கொடி
கோவை:
ஊருக்குள் வரக் கூடாது, ஆனால் உதயசூரியனுக்குத் தான் ஓட்டுப்போடுவோம் என திமுக எம்.எல்.ஏ., வைஎதிர்த்து தட்டி எழுதி வைத்துள்ளனர் திமுக இளைஞர்கள்.
பொள்ளாச்சி அருகே உள்ள கணபதி பாளையத்தில் எம்.எல்.ஏ, சண்முகத்திற்கு எதிராக இப்படி தட்டி எழுதிவைத்திருப்பவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்த இளைஞரணியினர் தான்.
கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, திமுக எம்.எல்.ஏ., சண்முகம், இந்த முறையும் போட்டியிடுகிறார்.இவர் எம்.எல்.ஏ,.வாக இருந்த சமயத்தில் கணபதிபாளையம் இளைஞர் அணியினரை கண்டுகொள்ளவில்லையாம். இதனால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சண்கத்தை எதிர்த்து அவர்கள் தற்போதுசெயல்பட்டு வருகின்றனர்.
தங்களது ஊருக்குள் எம்.எல்.ஏ. சண்முகம் வரக் கூடாது எனவும், ஆனால், நாங்கள் உதய சூரியனுக்குத் தான்ஓட்டுப் போடுவோம் என அதில் எழுதி வைத்துள்ளனர். இந்த தட்டியை ஊருக்கு வெளியில் பெரியதாகவைத்துள்ளனர்.
இதனைக் கண்ட எம்.எல்.ஏ.,போலீசில் புகார் செய்து தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரினார்.அவருக்கு இப்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications