சோனியாவுக்கு சுர்ஜித் சொல்லே மந்திரம்: மத்திய அமைச்சர்
கோவை:
சோனியா காந்தியின் ஆலோசகராக ஹர்கிஷன் சிங் சுர்ஜித் இருந்து வருகிறார். சுர்ஜித் இன்று சொல்வதை சோனியா நாளை அப்படியே திருப்பிச்சொல்கிறார். இருந்தாலும் மேற்கு வங்கம், கேரளாவில் மட்டும் ஏன் இரு துருவங்களாக இருக்கிறார்கள் எனத் தெரியவில்லைஎன மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஓ.ராஜகோபால் கூறியுள்ளார்.
கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பாரதிய ஜனதாக் கட்சியின் துணைத் தலைவர் ஓ.ராஜகோபால் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
ஜெயலலிதா நிர்ப்பந்தம் காரணமாக ஹர்கிஷன் சுர்ஜித், அவரின் வேட்பு மனு தள்ளுபடியானதை நியாயப்படுத்தி வருகிறார். நீதிமன்றத்தீர்ப்பை நிலை நாட்டப்பட்டு, பிரதிநிதித்துவ விதிமுறைப்படிதான் ஜெயலலிதாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் பாலகிருஷ்ணன் பிள்ளையின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. பழைய சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி இந்தமனு ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதும் முரண்பாடானது தான். இருந்தாலும், சட்டத்தில் உள்ள ஓட்டை கராணமாக அவரது மனுஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசியல் சட்ட மறு சீரமைப்பு செய்யப்படும்போது இத்தகைய குறைபாடுகளை நீக்க வேண்டும்.
ஹர்கிஷன் சிங் சுர்ஜித், இன்று சொல்வதை நாளை சோனியா அப்படியே திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறார். சோனியாவின்ஆலோசகராகவே இருக்கிறார். டெல்லி முதல் கன்னியாகுமரி வரை ஒரே பேச்சைப் பேச்சாக இருந்தாலும் கேரளாவிலும்மேற்கு வங்கத்தில் மட்டும் எதிரிகளாக மாறி விட்டது வியப்பிற்குரியாதாகவே இருக்கிறது.
கடந்த 40 ஆண்டுகளாக கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியும், மார்க்சிஸ்ட் கூட்டணியும் மாறி மாறி ஆட்சி நடத்தி வந்துள்ளன. ஆனால்ஒரு வளர்ச்சியும் மாநிலத்தில் இல்லை.
பொருளாதார முன்னேற்றத்தில் பின் தங்கிய மாநிலமாக கேரளா உள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்கள் ஆண்டுக்கு 6 சதவீதம்முதல் 8 சதவீதம் வரை வளர்ச்சி பெற்று வருகிறது. கேரளாவோ, ஒரு சதவீதத்திற்கும் கீழ் தான் வளர்ச்சி பெற்று வருகிறது.
கேரள சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க இயலாவிட்டாலும், ஒரு சிலஇடங்களில் வென்று சட்டசபைக்குச் செல்லும் என்றார் ஓ.ராஜகோபால்.