வைகோவுக்கு சாமி காட்டிய டாட்டா
கோவை:
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வைகோ, சுப்ரமணிய சுவாமியைப் பார்த்து கையசைத்தார். பதிலுக்குசுப்ரமணியசுவாமியும் காரில் இருந்தபடியே கையசைத்து விட்டுச் சென்றார்.
கோவையில் திங்களன்று வைகோ, பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். கவுண்டம்பாளையத்தில் வைகோ பிரச்சாரம்செய்து கொண்டிருந்தபோது அந்த வழியாக சுப்ரமணி சுவாமி வந்தார்.
வைகோ பிரச்சாரத்தில் மைக்கைப் பிடித்து பேசிக் கொண்டிருந்ததால், கூட்டம் ரோடு முழுவதும் வழிமறித்துநின்று கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக அகில இந்திய ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி காரில் வந்தார். ஆனால்கூட்டம் விலகி அவருக்கு வழிவிடவில்லை. வைகோவின் பேச்சைக் கவனிப்பதில் மும்முரமாக இருந்தனர்கூட்டத்தினர்.
அப்போது காரில் இருந்த சுப்ரமணிய சாமியை க் கண்ட வைகோ, தனது பேச்சை மாற்றி, அகில இந்திய தலைவர்ஒருவர் வந்திருக்கிறார். அவருக்கு நாம் வழி விடுவது நம் பண்பாடு. எனவே, கூட்டத்தினர் வழி விட வேண்டும்என்றார்.
அப்போது கூட்டத்தினர் விலகியபோது வைகோ அருகில் சுப்ரமணிய சுவாமியின் கார் வந்தபோது, நின்றுவைகோவிற்கு சுப்ரமணியசாமி "டாட்டா காட்டினார். அப்போது வைகோ, காரை விட்டு கீழே இறங்கி வாருங்கள்பேசலாம் என்றார்.
சுப்ரமணிய சாமியோ, தேர்தல் முடியட்டும் வருகிறேன் எனக் கூறி விட்டு மீண்டும் டாட்டா காட்டினார்.வைகோவும் பதிலுக்கு டாட்டா காட்டி விட்டுச் சென்று விட்டார்.