கொழும்பில் ஊரடங்கு தளர்வு
கொழும்பு:
கொழும்பில் வெள்ளிக்கிழமை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு சனிக்கிழமைகாலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது.
கடந்த 1ம் தேதி கொழும்பு நகருக்கு 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளமாவநெல்லா நகரில் இரண்டு முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லீம் சமூகத்தினரின்வீடுகளும் எரிக்கப்பட்டன.
இதை எதிர்த்து முஸ்லீம்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர். இதில் நடந்தகலவரத்தில் போலீசாருக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் பல வாகனங்கள் சேதமடைந்தன. 12க்கும் அதிகமான பொதுமக்கள்காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து கொழும்பு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொழும்பு நகரிலும்,இலங்கையின் மேற்கு பகுதியிலும் கடந்த 12 மணி நேரத்தில் எந்த விதமானஅசம்பாவித சம்பவமும் நடைபெறாதததால் ஊரடங்கு உத்தரவு சனிக்கிழமை காலை 6மணிக்கு தளர்த்தப்பட்டது.
இலங்கையின் தகவல் தொடர்பு அமைச்சர் அனுரா பிர்யதர்ஷன் யபா கூறுகையில்,அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் அமைதியை கொண்டுவர அரசு எடுத்தமுயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
வன்முறையை தூண்டுபவர்களையும், கலகத்தை விளைவிப்பவர்களையும் அரசுமன்னிக்காது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications