தமிழகத்தில் ஜெக்கு ஆதரவாக கர்நாடக முதல்வர் பிரச்சாரம்
கோவை:
பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்வோரையே கவர்னர் முதல்வராகப்பொறுப்பேற்க அழைக்க முடியும் என கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாதெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்திற்குப் பிரச்சாரம் செய்ய கோவை வந்த கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:
இந்திய அரசியல் சட்டப்படி முதல்வர் யார் என்பதை கவர்னர் முடிவுசெய்யமுடியும். எந்தக் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற முடிகிறதோ,அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் தேர்வு செய்வோரை முதல்வராகப் பொறுப்பேற்ககவர்னர் அழைக்கலாம்.
மாநல கவர்னர் நடுநிலையுடன் செயல்படுவார் என எதிர்பார்க்கிறோம். கர்நாடகத்தில்நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதுசோனியா காந்திக்கு ஏற்பட்ட நற்பெயரால் கிடைத்துள்ள இடங்கள்.
பாண்டிச் சேரியின் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். இதே போல்கேரளாவிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிஅமைக்கும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள அணி வெற்றி பெறும் என்றார்கிருஷ்ணா.