இலவச மின்சாரம் தொடரும்: கருணாநிதி உறுதி
திருச்சி:
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கான இலவச மின்சாரத் திட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும்என்று கருணாநிதி கூறினார்.
வையம்பட்டியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தின் போது,
திமுக ஆட்சியில் இதுவரை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்து வந்திருக்கிறோம்.
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தத் திட்டம் நிச்சயம் தொடரும்.
தேர்தலில் போட்டி போடக் கூடத் தகுதியில்லாத ஜெயலலிதா எப்படி முதல்வராக முடியும்.
அப்படியே முதல்வரானாலும், அடுத்த 6 மாதங்களுக்குள் அவர் முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.
ஆனால், அதற்குள் அவருடைய மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டு விடும்.
நீதிமன்ற வழக்குகளில் கூட வெற்றி பெற முடியாத ஜெயலலிதா எப்படித் தேர்தலில் போட்டியிட்டு, மக்கள்நீதிமன்றத்தில் வெற்றிபெற முடியும்?
அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்றுகூறினார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications