அணு மின் உற்பத்தியில் இந்தியா சாதனை
ஜெனீவா:
கடந்த ஆண்டு மட்டும் 3 அணு மின் உற்பத்தி நிலையங்களை நிறுவி இந்தியா சாதனைபடைத்துள்ளது என்று ஐநாவின் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட 6 அணு மின் உற்பத்தி நிலையங்களில், 3நிலையங்கள் இந்தியாவால் நிறுவப்பட்டுள்ளன. பிரேசில், சீனா மற்றும் பாகிஸ்தான்ஆகியவை முறையே ஒரு அணு மின் உற்பத்தி நிலையத்தை நிறுவியுள்ளன.
இராஜஸ்தானில் 2 அணு மின் உற்பத்தி நிலையங்களும் கர்நாடகாவில் 1 அணு மின்உற்பத்தி நிலையமும் நிறுவப்பட்டுள்ளன.
இந்தியாவில் மொத்தம் 14 அணு மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இந்தியாவின்மொத்த மின் உற்பத்தியில் 2 சதவிகித மின்சாரம் இவற்றிலிருந்து உற்பத்திசெய்யப்படுகிறது.
1,000 மெகாவாட் கூடங்குளம் அணு மின் திட்டத்தின் இரு பிரிவுகள் அடுத்து வரும்சில ஆண்டுகளில் நிறைவு பெறும்.
கடந்த ஆண்டுவரை, உலகில் மொத்தம் 438 அணு மின் உற்பத்தி நிலையங்கள்இருந்தன. கடந்த ஆண்டு அணுக் கசிவினால் மூடப்பட்ட செர்நோபில் அணு மின்உற்பத்தி நிலையமும் இவற்றில் ஒன்று.
அமெரிக்காவில் 104 அணு மின் உற்பத்தி நிலையங்களும், ஃபிரான்சில் 59 அணு மின்உற்பத்தி நிலையங்களும், ஜப்பானில் 53 அணு மின் உற்பத்தி நிலையங்களும் உள்ளன.
உலகின் மொத்த மின் உற்பத்தியில் 16 சதவிகித மின்சாரம் இவற்றிலிருந்து உற்பத்திசெய்யப்பட்டது என்றும் அந்த ஏஜென்சி கூறுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.