ரஷ்ய மக்களை கவர்ந்த இந்திய மாணவர்கள்
மாஸ்கோ:
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடந்த சர்வதேசக் கலைவிழாவில் இந்தியப் பள்ளி மாணவர்களின் பரதநாட்டியநிகழ்ச்சி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.
"வீட்டில் அமைதி, உலகில் அமைதி" என்ற தலைப்பின் கீழ் நடந்த இக்கலைவிழா, ஆசியா, ஐரோப்பா, லத்தீன்அமெரிக்கா மற்றும் ஆஃப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களின் நாட்டியங்களை ஒரே மேடையில் பார்ப்பதற்குவசதி ஏற்படுத்தித் தருகிறது.
மாஸ்கோவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் பரதநாட்டியம் ஆடி பார்வையாளர்களின் பலத்தகரகோஷத்தைப் பெற்றனர்.
போட்டி இல்லாவிட்டாலும், மற்ற நடனங்களைவிட இந்திய மாணவர்களின் பரதநாட்டியம்தான் நன்றாக இருந்ததுஎன்று பார்வையாளர்கள் சான்றிதழ் வாங்கினர்.
ஏப்ரல் 23 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்ற உலக குழந்தைகள் வாரத்தையொட்டி, இந்தக் கலைவிழாநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.