மகளிர் நலன் காக்கும் இயக்கம் அதிமுக: ஜெ
சேலம்:
மகளிர் நலன் காக்கும் இயக்கமாகத் திகழ்கிறது எங்கள் இயக்கம் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாகூறினார்.
சேலத்தில் பிரச்சாாரம் மேற்கொண்டபோது ஜெயலலிதா பேசியதாவது:
மகளிரின் நலன் காக்கும் ஒரே இயக்கமாக அதிமுக விளங்கி வருகிறது. தேர்தலில் போட்டியிட பெண்களுக்குகணிசமான இடங்களைக் கொடுத்துள்ளோம். பெண்களுக்கு கட்சியில் அதிக பொறுப்புகளை அளித்துள்ளோம்.அதைவிட, பெண்களுக்கு கட்சியில் 33 சதவீத இடங்களை அளித்துள்ள ஒரே இயக்கம் அதிமுக தான்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போதைய அரசு நிறைவேற்றி வரும் மகளிர் நலத் திட்டங்களுடன், மகளிர் சிறப்புமேம்பாட்டுத் திட்டங்களையும் உருவாக்குவோம்.
கருணாநிதி ஆட்சியில் அரிசி, மண்ணெண்ணெய் விலை ஏறி விட்டது. விலைவாசி உயர்ந்து விட்டது.
தென்மாவட்டங்களில் ஜாதிக் கலவரம் நிகழ்ந்தது. வன்முறை பெருகியது. கோவையில் தீவிரவாதம் பெருகி,குண்டுகள் வெடித்து, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. இத்தகைய சோக வரலாறுகளைக் கொண்டது தான் திமுகஆட்சி.
இத்தகைய மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications