தலித் மக்களின் ஓட்டு யாருக்கு?
ஓட்டப்பிடாரம்:
ஜாதியை அடிப்படையாக கொண்ட அரசியலும், தலித் இனத்தவரின் வாக்குகளும் வரவிருக்கும் தேர்தலில்முக்கியப்பங்கு வகிக்கிறது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசுவாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் தலித் மக்கள் தொகை 23 சதவிகிதம் உள்ளது. குறிப்பாக தென்தமிழ் நாட்டில் தலித் வாக்ககுள்தான்வேட்பாளர்களின் வெற்றியை நிச்சயம் செய்கின்றன.
தி.மு.க. அணியில் இணைந்துள்ள புதிய தமிழகம் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது தலித் வாக்குகளைபெறுவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அ.தி.மு.கவுக்கு ஆதரவாக தேவர் இனத்தவரின் வாக்குகள் இருக்கின்றன. அதற்கு இணையான உள்ளவை தலித்வாக்குகள். அந்த வாக்குகள் அ.தி.மு.கவுக்கு சென்று விடக்கூடாது என்ற கணக்கில்தான் புதிய தமிழகம் கட்சிக்கு 10தொகுதிகள் தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் டாக்டர் கிருஷ்ணசுவாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், திராவிடகட்சிகள், குறிப்பாக தி.மு.க. தலித்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டுள்ளது. அவர்களின் தேவையையும்புரிந்து கொண்டுள்ளனர். அதனால் அவர்கள் இப்போது தலித்களை ஆதரிக்கிறார்கள் என்றார்.
தி.மு.க.தலைவர் விடுதலை விரும்பி கூறுகையில், நாங்கள் என்றும் வாக்களர்களைத்தான் நம்பி இருக்கிறோம்.தொடர்ந்து ஊழலை எதிர்த்து பாடுபடுவோம் என்றார்.
தி.மு.க.தனது கூட்டணியில் தலித் கட்சிகளுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது. இது தலித்களுக்குகொடுக்கப்படடும் முக்கியத்துவத்தை காட்டும் விதமாகவே அமைந்துள்ளது.
தலித்கள் அதிகம் வாழும் கிராமங்களில் தலித் வேட்பாளர்கள் மட்டுமே பிரச்சாரம் செய்யஅனுமதிக்கப்படுகிறார்கள்.
புதிய தமிழகம் போன்ற கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றால் அது தமிழகத்தில் நிலவி வரும் ஜாதி அரசியலில்புதிய பரிணாமத்தை கொண்டு வரும்.
முன்னர் புதிய தமிழகம் கட்சியையும் , விடுதலை சிறுத்தை அமைப்பையும் வன்முறையை தூண்டும் ஜாதிக்கட்சிகள்என கூறி வந்த கருணாநிதி இப்போது அந்த கட்சி தலைவர்களின் ஆதரவையும், பிரச்சாரத்தையும் எதிர்ப்பார்க்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications