தேர்தலில் வாக்களிக்க தொழிலாளர்களுக்கு விடுமுறை
சென்னை:
தேர்தல் நாளன்று தினக்கூலி பெறும் தொழிலாளர்கள், கடைகளில் பணிபுரிபவர்கள், வர்த்தக நிறுவனங்களில்பணிபுரிவோர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர்துறைஅறிவித்துள்ளது.
இது பற்றி தொழிலாளர் துறை செயலாளர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்த மாதம் 10ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலும், திருச்சி நாடாளுமன்றத்திற்கு இடைத் தேர்தலும்நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் அனைவருக்கும் தேர்தலில் வாக்களிக்கும் வகையில்சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் சம்பளம் பிடிக்கக்கூடாது என உத்தரவிவிடப்பட்டுள்ளது. தற்காலிக பணியில் இருப்பவர் மற்றும்தினக்கூலி பெற்று பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படவேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதை மீறி செயல்படும் நிறுவனங்களுக்கு ரூ 500 வரை அபராதம் விதிப்பதற்கு சட்டப்பிரிவில் வழிவகைசெய்யப்பட்டுள்ளது.
தேர்தல் தினத்தன்று ஷிப்டில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்என இந்திய தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனாலும் எல்லா தொழிலாளர்களும் வாக்களிக்கவேண்டும் என்பதற்காக வாக்குபதிவு முடிவடைவதற்கும் அடுத்து ஷிப்ட் தொடங்குவதற்கும் இடையில் போதியநேரம் இருக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்த விதிமுறையை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்த பகுதியில் உள்ள தேர்தல்அதிகாரியிடமோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலரிடமோ புகார் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications