நிரம்பி வழியும் கோவை சிறைச்சாலை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை சிறைச்சாலை நிரம்பி வழிகிறது என்று கோவை சிறைத் துறை டிஐஜி எஸ்றா விடுத்துள்ள அறிக்கையில்கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கோவை குண்டு வெடிப்புக் கைதிகள் உள்பட 2,208 விசாரணைக் கைதிகள் கோவை சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். சிறையின் கொள்ளளவைக் காட்டிலும் 250 பேர் அதிகமாக உள்ளனர்.
தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தனி சிறையில் இருந்து வருகின்றனர். எனவே,கூடுதல் பாதுகாப்பிற்கு அதிகமான போலீசார் ஈடுபடுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது சிறை நிரம்பியுள்ளதால், அவர்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டியுள்ளது. எனவேமீதமுள்ளவர்கள் சேலம் சிறைக்கு மாற்றப்படுகின்றனர்.
சேலம் சிறையில் 1,431 பேர் வரை சிறை வைக்க முடியும். தற்போது அங்கு 1,200 பேர் மட்டுமே உள்ளனர் என்றார்எஸ்றா.












Click it and Unblock the Notifications