For Daily Alerts
Just In
தமிழகத்தில் கோடைமழைக்கு 2 பேர் பலி
விழுப்புரம்:
தமிழகத்தில் ஞாயிற்றக்கிழமை நள்ளிரவில் பெய்த கடுமையான மழை காரணமாக 2 பேர் பலியாயினர்.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த மே 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆரம்பித்தது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் கடுமையான வெயில் அடித்தது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஊரணிதாங்கல் என்ற ஊரில், ஞாயிற்றுக்கிழமைநள்ளிரவு கடும் சூறைக் காற்றுடன் பெய்த மழை காரணமாக, ஒரு வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்ததில்புவனேஸ்வரி (26) அதே இடத்தில் உயிரிழந்தார்.
அதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த கம்பர்நத்தம் என்ற ஊரில், ஞாயிற்றுக்கிழமைநள்ளிரவு மின்னல் தாக்கியதில் சுகுமார் (39) என்ற விவசாயி பலத்த காயமடைந்த பின்னர் இறந்தார்.
Story first published: Tuesday, May 8, 2001, 5:30 [IST]