இலங்கையில் 15 ம் தேதி சமரசப்பேச்சுவார்த்தை: நார்வே
கொழும்பு:
இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இந்த மாதம் 15 க்குள் சமரசப் பேச்சுவார்த்தைதொடங்கும் என்று நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் தெரிவித்தார்.
இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடி வரும் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையேதொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இந்தத் தாக்குதலில் பலர் உயிரிழந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் வகையிலும், சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும்நார்வே மற்றும் கனடா நாட்டுத் தூதர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, பலமுறை இலங்கைக்கு வந்து, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், அரசியல் பிரிவு தலைவர்தமிழ்ச்செல்வன், அதிபர் சந்திரிகா குமாரதுங்கா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார் நார்வே தூதர் எரிக்சோல்ஹெம்.
அவர் கடந்த வாரமும் இலங்கைக்கு வந்து அதிபர் சந்திரிகாவையும், புலிகள் தலைவர் பிரபாகரனையும் சந்தித்துப்பேசினார்.
அவர் கூறுகையில், இலங்கை இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இரு தரப்பினரிடமும்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இந்த மாதம் 15 ம் தேதிக்குள் சமரசப்பேச்சுவார்த்தை தொடங்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
பேச்சுவார்த்தை எங்கு, எப்போது நடக்கும்? பேச்சுவார்த்தையில் யார் யார் பங்கேற்பார்கள் போன்ற தகவல்களைஅவர் கூறவில்லை.
இந்நிலையில், சமரச பேச்சுவார்த்தை தொடங்க வேண்டுமானால், இலங்கை அரசு சண்டை நிறுத்தம் அறிவிக்கவேண்டும். புலிகள் இயக்கத்தின் மீது விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று அறிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications