காலையிலேயே ஓட்டுப் போடுங்கள்: தேர்தல் ஆணையம்
சென்னை:
மே 10 ஆம் தேதி தேர்தலில் காலையிலேயே வாக்களித்து விடுங்கள் என்று தேர்தல் ஆணையம் வாக்காளர்களைக்கேட்டுக் கொண்டிருக்கிறது.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
மே 10 ம் தேதி காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும்.
மாலை 4 மணிக்கு அல்லது அதற்கு முன்பாக வரும் வாக்காளர்களுக்கு, வாக்குச் சாவடி தலைமை அதிகாரி ஒருசீட்டு கொடுப்பார்.
4 மணிக்கு மேல் வரும் வாக்காளர்களுக்கு சீட்டுக் கொடுக்கப்பட மாட்டாது. அவர்கள் ஓட்டுப் போடவும் முடியாது.
எனவே, கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க காலையிலேயே வந்து ஓட்டுப் போடுதல் நலம் என்று கூறப்பட்டுள்ளது.
ஒருவர் ஓட்டை வேறு யாராவது போட்டுவிட்டார்களா?
ஒருவருடைய ஓட்டை வேறு யாராவது போட்டுவிட்டால் என்ன செய்வது? அதற்கும் ஒரு வழி உள்ளது என்றுகூறுகிறார் சாரங்கி.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
ஒருவர் ஓட்டை இன்னொருவர் போட்டு விட்டால் அவருக்கு இன்னொரு வழியில் ஓட்டுப் போட வகை செய்துகொடுக்கப்படும். அந்த வழிக்கு "டெண்டர்டு ஓட்டு" என்று பெயர். இதன்படி, சம்பந்தப்பட்ட உண்மையான நபர்,தான்தான் உண்மையான நபர் என்று தகுந்த ஆதாரங்களைக் காட்டி வாக்குச் சாவடி தலைமை அதிகாரியிடம்அனுமதி வாங்கிவிட்டால் போதும். அவர் ஓட்டுப் போட்டு விடலாம்.
ஆனால், அதை மின்னணு எந்திரம் மூலம் போட முடியாது. பழைய முறையிலேயே வாக்குச் சீட்டில் முத்திரையிடவேண்டும். இதற்கான வாக்குச் சீட்டுக்களும் தயாராக உள்ளன. இத்தகைய டெண்டர் வாக்குச் சீட்டுக்களை அந்தவாக்குச் சாவடியின் அதிகாரியே பத்திரமாக வைத்திருப்பார் என்றார் சாரங்கி.












Click it and Unblock the Notifications