வாக்குச்சாவடி கோரி மறியல் செய்த 3 வேட்பாளர்கள்
தக்கலை:
வாக்குச்சாவடி அமைக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 3 வேட்பாளர்கள் உள்பட 212 பேர் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
நுள்ளிவிளை பேரூராட்சிக்கு உள்பட்ட மாடத்தட்டுவிளையில் 1,500 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் 4 கிலோமீட்டர் நடந்து சென்று பேயன்குழியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்றுதான் வாக்களிக்க வேண்டும்.
எனவே மாடத்தட்டுவிளையில் வாக்குச்சாவடி அமைக்க வலியுறுத்தி, பத்மநாபபுரம் தொகுதியைச் சேர்ந்த அதிமுக,மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் உள்பட ஏராளமானமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும், உயர் அதிகாரிகள் விரைந்து வந்து சமரசம் செய்துவைக்க முயற்சித்தனர்.
மக்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கவே, மறியலில் ஈடுபட்ட 212 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர்அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால், நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் 4மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.