அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார் எம்.எஸ்.கில்
டெல்லி:
தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார்.
எம்.எஸ்.கில் தலைமை தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்டபின் 3 நாடாளுமன்றத் தேர்தலையும், 30 சட்டசபைத்தேர்தல்களையும், பல இடைத்தேர்தல்களையும் நடத்தியுள்ளார்.
அவரது பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. ஓய்வுபெறுவதையொட்டி அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் பாண்டிச்சேரி சட்டசபைகளுக்கு வரும் 10 ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஐந்துமாநிலங்களும் தேர்தல் ஆணையம் கூறியுள்ள விதிமுறைகளைப் பின்பற்றியது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, தங்களது திட்டங்களைப் பற்றி மட்டுமே கூற வேண்டும். பிறகட்சிகளைப்பற்றி பழி கூறவோ, குற்றம்சாட்டவோ கூடாது.
அமெரிக்காவைப் போல் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குப்பிறகு தங்களது சாதனைப்பட்டியலைப்பற்றிக் கூற வேண்டும்.
நல்லாட்சி நடைபெற அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் கில்.












Click it and Unblock the Notifications