அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்: கெளடா
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியே அதிக இடங்களைப் பெற்று வெற்றி பெறும் என்று முன்னாள்பிரதமர் தேவகவுடா நம்பிக்கை தெரிவித்தார்ய
முன்னாள் பிரதமர் தேவ கவுடா சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில்,
மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியாகிய எங்கள் கட்சி, திமுக, அதிமுக கூட்டணிகளை எதிர்த்து தனியாகப்போட்டியிடுகின்றது.
பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால் நாடே அழிவுப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.பல துறைகளில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது அனைவரும் அறிந்ததாகும்.
தெஹல்கா ஆயுதப்பேர ஊழல் சம்பந்தப்பட்ட காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதாக இருந்தது.ஆனால் ஆளுங்கட்சியினர் தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்தி விட்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நான்கு தொகுதிகளில்வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த நான்கு மனுக்களுமே நிராகரிக்கப்பட்டுவிட்டது. இது வேண்டுமென்றே செய்யப்பட்ட சதியாகும். சட்டசபைத்தேர்தல் முடிவுகள் அதிமுக கூட்டணிக்கே சாதகமாக அமையும். ஜெயலலிதா முதல்வராவதற்கு சட்டத்தில் இடம்உள்ளது என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சேஷன் கூறியுள்ளார்.
அதனால் அதிமுக கூட்டணியே அமோக வெற்றி பெறும். ஜெயலலிதாதான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்றார்கவுடா.












Click it and Unblock the Notifications