வெற்றி மட்டுமே குறிக்கோள்: பண்ருட்டி ராமச்சந்திரன்
Subscribe to Oneindia Tamil
பண்ருட்டி:
தேர்தல் முடியும் வரை நமது கவனம் வெற்றியில் மட்டுமே இருக்க வேண்டும் என்று மக்கள் நல உரிமைக் கழக வேட்பாளர்பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
பண்ருட்டி தொகுதியில் மக்கள் நல உரிமைக்கழக வேட்பாளராகப் போட்டியிடும் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:
சலசலப்புக்கு அஞ்சுபவர்கள் அல்ல நாங்கள். வெற்றி நமதே. எனக்கு பயம் என்பது எப்போதும் கிடையாது.
சட்டசபையில் பல பிரச்சனைகள் ஏற்படும். அப்போதெல்லாம் நான் மிகவும் அமைதியாக இருப்பேன். அதைப்பார்த்து புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர். உன்னால் எப்படி அமைதியாக இருக்க முடிகிறது என்று கேட்பார். அதாவது நான் சலசலப்புக்கு அஞ்ச மாட்டேன்.
தேர்தல் முடியும்வரை வெற்றி மட்டுமே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். சட்டத்தை நாம் ஒரு போதும் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.












Click it and Unblock the Notifications