ஒரு தவறு செய்தால்.. அதை தெரிந்து செய்தால்..

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் என எம்.ஜி.ஆர்பாடியது ஜெயலலிதாவை குறிப்பிட்டுதான் என நடிகர் சரத்குமார் கூறினார்.

தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை வில்லிவாக்கத்தில் தி.மு.க.சார்பில் போட்டியிடும் நடிகர்நெப்போலியனை ஆதரித்தும், தி.நகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அன்பழகனை ஆதரித்தும் பிரச்சாரம்செய்தார் நடிகர் சரத்குமார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் பேசுகையில், 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் கருணாநிதியை வெற்றி பெறச்செய்தீர்கள். ஜெயலலிதா ஆட்சியல் பூகம்பத்தால் குஜராத் சீரழிந்ததது போல் சீரழிந்திருந்த தமிழகத்தை சீராக்கிபொற்கால ஆட்சியை வழங்கினார் கருணாநிதி.

பொற்கால ஆட்சி தொடர்ந்து வருகிறது. இப்போது க்ளைமாக்ஸ் காட்சி நடந்து கொண்டிருக்கிறது.

மூப்பனார், ஜெயலலிதா திருந்திவிட்டார் என கூறியுள்ளார். தவறு செய்தவர்கள்தான் திருந்துவார்கள். மூப்பனாரே,ஜெயலலிதா தவறு செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். தமிழகத்தில் கருணாநிதி அலைதான் வீசுகிறது. வேறு எந்தஅலையும் வீசவில்லை.

எம்.ஜி.ஆர். ஆட்சி அமைப்போம் என கூறி வரும் ஜெயலலிதா தான் ஆட்சி செய்த 5 ஆண்டு காலத்தில் எம்.ஜி.ஆர்.பெயர் எங்குமே இடம் பெறவில்லை.

ஜெயலலிதா, திரைப்பட நகரத்திற்கு ஜெயலலிதா திரைப்பட நகரம் என பெயரிட்டிருந்தார். கருணாநிதி வந்தபிறகுதான் அதன் பெயரை எம்.ஜி.ஆர். திரைப்பட நகரம் என மாற்றி அமைத்தார்.

எம்.ஜி.ஆர். ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் எனபாடியது ஜெயலலிதாவை குறிப்பிட்டுத்தான். பொற்கால ஆட்சி தொடர நீங்கள் அனைவரும் தி.மு.கவுக்குவாக்களியுங்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+