பாதுகாப்புப் பணியில் 1,00,000 போலீசார்
சென்னை:
நாளை நடைபெறும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் 1,00,000 போலீசார்பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என்று தமிழக காவல்துறை டிஜிபி ஆர். ராஜகோபாலன் கூறினார்.
இதுகுறித்து இன்று அவர் மேலும் கூறியதாவது:
மத்திய ரிசர்வ் போலீஸ் தவிர, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலிருந்தும் ஆயிரக் கணக்கானபோலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் முடிந்த பின், வாக்கு எண்ணிக்கை நடக்கவிருக்கும் 101 மையங்களுக்கும் சேர்த்து 121 பந்தோபஸ்துப்படைகள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
தேர்தல் கமிஷனின் விதிமுறைகளுக்கேற்ப, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அனைத்துநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 54,912 வாக்குச் சாவடிகளில், 6,730 வாக்குச் சாவடிகள் பதற்றம்மிகுந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
சந்தனக் கடத்தல் வீரப்பனும் அவன் கூட்டாளிகள் நடமாடும் பகுதிகளாகக் கருதப்படும் சேலம், தருமபுரிமாவட்டங்களில் உள்ள பல வாக்குச் சாவடிகள் பதற்றம் மிகுந்தவையாகக் கூறப்படுகின்றன.
கடலூர், விழுப்புரம், திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில் சாதிக் கலவரங்கள் ஏற்பட வாய்ப்புகள்அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.
கள்ள ஓட்டுக்கள் போடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராஜகோபாலன்.