பாண்டிச்சேரி: போலீஸ் தடியடிக்கு ஒருவர் பலி
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் சட்டசபைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போது போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும்இடையே நடந்த தகராறில் ஒருவர் உயிரிழந்தார்.
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 30 சட்டசபைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு மிகவும்விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இங்கு மொத்தம் 778 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 229 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவாக்குச்சாவடிகளாகவும், 33 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளாகவும் அடையாளம்கண்டறியப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸார்ரோந்துப்பணியில் ஈடுபடுவது மட்டுமின்றி வாகனச்சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பாண்டிச்சேரியில் உள்ள ஊத்துப்பட்டு வாக்குச்சாவடி அருகே ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது. அவர்களைக்கலைத்து விடுவதற்காகப் போலீஸார் தடியடி நடத்தியபோது எல்லையப்பன் என்பவர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார்.
இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து சுமார் 3 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் வாக்குப்பதிவு மீண்டும் ஆரம்பித்தது.
இதற்கிடையே, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஒருவரும் திடீரென்று மரணமடைந்தார்.












Click it and Unblock the Notifications