For Daily Alerts
Just In
லாரி மோதி 2 பேர் சாவு
சென்னை:
சென்னையில் லாரி மோதி லாட்ஜ் உரிமையாளர் உள்பட 2 பேர் இறந்தனர்.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் ராஜ். பெரியமேடு பகுதியில் லாட்ஜ் ஒன்றுவைத்திருந்தார். இவரது லாட்ஜில் வேலை பார்த்து வந்தவர் ராமு.
மைக்கேல் ராஜும், ராமுவும் அண்ணா சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை மொபெட்டில் சென்றுகொண்டிருந்தனர். முத்துச்சாமி அய்யர் பாலம் மீது அவர்கள் போய்க் கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரிஒன்று மொபெட்டில் மோதியது.
இதில் ராமுவும், மைக்கேல் ராஜும் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அரசு பொது மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் இறந்தனர்.
Comments
Story first published: Friday, May 11, 2001, 5:30 [IST]