அசாமில் விறுவிறுப்பாக நடக்கிறது மறுவாக்குப்பதிவு
கவுஹாத்தி
மறுவாக்குப்பதிவு நடந்து வரும் அசாமில் காலை 10 மணி வரை 15 சதவிகிதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
தமிழகம், மேற்கு வங்காளம், அசாம், கேரளா,பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் வியாழக்கிழமை சட்டசபை தேர்தல் நடந்தது.தேர்தலின் போது நடந்த வன்முறை காரணமாக அசாமில் 206 வாக்குச்சாவடிகளில் இரண்டு கட்டமாக மறுவாக்குப்பதிவுக்குஉத்தரவிடப்பட்டிருந்தது.
இவற்றில் பிரம்மபுத்திரா பகுதியில் உள்ள 75 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடக்கிறது.131 தொகுதிகளில்ஞாயிற்றுக்கிழமை காலை வாக்குப்பதிவு நடக்கிறது.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது. காலை 10 மணி நிலவரப்படி 15 சதவிகிதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. மாலை 4மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையும்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்தது முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.
தேர்தலில் வன்முறைகள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக மறுவாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும், ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மறுவாக்குப் பதிவு நடைபெறும்செல்லும் வழியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications