எக்ஸிட் போல் முடிவை நம்ப முடியாது: மலைச்சாமி
சென்னை:
இந்திய தொலைக்காட்சி தூர்தர்ஷன் நடத்திய எக்ஸிட் போல் கருத்து கணிப்பு ஒட்டு மொத்த வாக்காளர்களின் கருத்து கிடையாது எனஅ.தி.மு.க. தொழிற்சங்கப் பொதுச் செயலாளர் மலைச்சாமி எம.பி. கூறியுள்ளார்.
வியாழக்கிழமை தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது.தேர்தல் முடிந்தும் அன்று மாலை தூர்தர்ஷன், வாக்களித்த மக்களிடம் அவர்கள்யாருக்கு வாக்களித்தார்கள் என கருத்து கேட்டு தூர்தர்ஷன் எக்ஸிட் போல் வெளியிட்டது.
இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்த விவரம்:
மொத்த வாக்குகளில்,48 சதவீதத்தை அ.தி.மு.க. கூட்டணி பெற்றுள்ளது
திமுக கூட்டணி 47 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது
பிற கட்சிகள் 5 சதவீதத்தைப் பெற்றுள்ளன
இந்த வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால், அ.தி.மு.க. கூட்டணிக்கு 125 இடங்கள் கிடைக்கும். திமுக கூட்டணிக்கு 105 இடங்கள்கிடைக்கும். பிற கட்சிகளுக்கு 4 இடங்கள் கிடைக்கும்.என தெரிய வந்தது.
இந்த கருத்துக் கணிப்பு பற்றி மலைச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூர்தர்ஷன் கருத்துக் கணிப்பு தமிழக மக்கள் அனைவரின் ஒட்டு மொத்த கருத்து கிடையாது. சென்னை நகரில் வாக்களித்துவிட்டுவந்தவர்களிடம் மட்டும் கேட்டு அதன்படி வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவு அது. இது தமிழக மக்களின் அனைவருடைய கருத்தையும்பிரதிபலிக்கும் முடிவு கிடையாது.
சில தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளதைவிட உண்மையில் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவுஅதிகமாக உள்ளது.
தூர்தர்ஷன் வெளியிட்ட கருத்துக் கணிப்பு பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி பெரும்வெற்றிபெறும் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications