6 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு முடிந்தது
சென்னை:
தமிழகத்தில் 6 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு மிகவும் அமைதியாக முடிவடைந்தது.
தமிழகத்தில் கடந்த 10 ம் தேதி நடந்த சட்டசபைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக இயங்காதகாரணத்தால் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு பிறப்பித்திருந்த 6 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை காலை 7 மணிக்குவாக்குப்பதிவு தொடங்கியது.
துறைமுகம் தொகுதியில் உள்ள ஏழுகிணறு வாக்குச்சாவடி, வேலூர் தொகுதியிலுள்ள சாயிராதாபுரம் கிருஷ்ணசாமி உயர்நிலைப்பள்ளியில்அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி, விழுப்புரம் தொகுதியில் ராமையன்பாளையத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி, தூத்துக்குடிமாவட்டத்தில் உள்ள நடராஜன் மெட்ரிக்குலேஷன் பள்ளியிலுள்ள வாக்குச்சாவடி, அருப்புக்கோட்டையிலுள்ள தொட்டியங்குளம் மற்றும்திருவெறும்பூரிலுள்ள செயின்ட் ஆக்னஸ் வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.
யு.என்.ஐ.