"தேர்தல் கமிஷனின் சதியால் பல லட்சம் பேர் வாக்களிக்க முடியவில்லை"
ஈரோடு:
தமிழத்தில் பல லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமை பறிபோனதற்கு தேர்தல் கமிஷனின்திட்டமிட்ட சதியே காரணம் என மாநில கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே. பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
கடந்த 1999ஆம் ஆண்டில் வாக்களித்த பலருக்கும், இப்போது வாக்களிக்க வாய்ப்பு இயலாமல்போய்விட்டது. அடையாள அட்டையைக் கொடுத்து வாக்குரிமையை தேர்தல் கமிஷன் பறித்துக்கொண்டது.
இது ஜனநாயகக் கேலிக்கூத்தாக உள்ளது. பெயர் சேர்க்கக் கோரி 42 தொகுதிகளில் அளவுக்குஅதிகமான விண்ணப்பங்களை தேர்தல் கமிஷன் சேர்த்துக் கொண்டது. மீண்டும் சரிபார்க்கும் பணியில் முகவரிமாறிச் சென்றவர்களின் பெயர்களை எடுத்து விட்டது சரியே. ஆனால் அதே முகவரியில் இருப்பவர்களைச்சேர்க்கத் தவறி விட்டது.
விடுபட்டவர்களின் பெயர்களைச் சரிபார்க்க அவகாசம் அளிப்பதாகக் கூறியது. ஆனால்,இறுதிப்பட்டியலைப் பார்வைக்கு வைக்க காலதாமதம் ஆனது. இறுதிப்பட்டியல் வைக்கப்படுவதற்குள்கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்து போனது. இதனால் பொதுமக்கள் யாரும் சரிபார்க்கஇயலவில்லை.
இத்தகைய தவறுகளைச் சுட்டிக் காட்டியும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டியும், நான் கடந்த 6 மாதங்களாக தேர்தல் கமிஷனுக்கு முறையாக எழுத்து மூலம் புகார்அனுப்பியும் எனக்குப் பதில் இல்லை.
பல லட்சம் வாக்காளர்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் கமிஷனின் திட்டமிட்டசதியாகும். கடந்த 1999ஆம் ஆண்டு வாக்களித்தவர்களின் பெயர்கள் இந்த முறை வாக்களிக்கமுடியாதவகையில் நீக்கப்பட்டுள்ளது. இது குற்றவியல் நடவடிக்கையாகும்.
வாக்குரிமையைப் பறிக்க தேர்தல் ஆணையம் ஒவ்வொருவருக்கும் ரூ. 4 செலவிட்டுள்ளது. தபால்மூலம் சரிபார்க்க ரூ.3.50ம், நேரடியாக சரிபார்க்க 50 பைசாவும் செலவிட்டுள்ளது. ஜனநாயகவாக்குரிமை பறிக்கப்பட்டதற்கு தேர்தல் கமிஷன் சரியான பதில் சொல்ல வேண்டும் என்றார்பெரியசாமி.












Click it and Unblock the Notifications