தஞ்சையில் குடிநீர் கோரி பெண்கள் சாலைமறியல்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் குடிநீர் வசதி கோரி திடீர் சாலைமறியலில் பெண்கள் ஈடுபட்டனர். தஞ்சாவூர் பூக்காரத் தெரு லாயம் பகுதியில் கடந்த சிலநாட்களாகக் குடிநீர் வரவில்லை.
இது சம்பந்தமாக நகரசபைத் தலைவர், ஆணையருக்கு மனுக்கள் கொடுத்தும் பலன் இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், விளார் ரோட்டில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசாரும் அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்றனர்.
ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு லாரி குடிநீர் வழங்குவதாகவும், இப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறு வேலையை 15 நாட்களில் முடித்துத்தருவதாகவும் தஞ்சாவூர் நகராட்சி ஆணையர் உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து, பெண்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இச் சாலைமறியலால் 1 மணி நேரம்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications