கேரள முதல்வராக ஏ.கே.அந்தோணி தேர்வு
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
கேரளாவின் புதிய முதல்வராக ஏ.கே.அந்தோணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து அங்குகாங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணிக்கும், கருணாகரனுக்கும் இடையே முதல்வர் பதவியைக்கைப்பற்றுவதில் கடும் போட்டி இருந்தது.
இவர்களை சமாதானப்படுத்துவதற்காக காங்கிரஸ் மேலிடம் மோதிலால் வோரா, குலாம் நபி ஆசாத் ஆகியோரைதிருவனந்தபுரத்திற்கு அனுப்பியது.
அவர்கள் திருவனந்தபுரத்தில் ஏ.கே.அந்தோணி மற்றும் கருணாகரன் ஆகியோரை தனித்தனியே சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதற்கிடையே, கேரள சட்டசபைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில்ஏ.கே.அந்தோணி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications