இலங்கையில் கண்ணிவெடிவிபத்து: தமிழ்ச்செல்வன் சிக்கினார்?
கொழும்பு:
விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் இலங்கையின் வடக்குப்பகுதியில் கண்ணி வெடி வெடித்ததில்விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் சிக்கிக் கொண்டார்.
நார்வே தூதுக்குழு அமைதிப் பேச்சு வார்த்தை குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கு முன்பு இந்த வெடி விபத்துநடந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது
இது குறித்து கூறப்படுவதாவது:
விடுதலை புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழச்செல்வன் நார்வே வன்னி பகுதியில் இருக்கும் மாலாவிபகுதியில் கண்ணி வெடி விபத்தில் சிக்கிக் கொண்டார். அவரது நிலை என்ன என்பது தெரியவில்லை எனகூறப்படுகிறது.
ஆனாலும் சோல்ஹேம் இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து புதன் கிழமை மதியம் கிளம்பி விடுதலை புலிகளின்தலைவர்களை சந்திக்க மாலவிக்கு சென்றுள்ளார் என நார்வே தூதரக செய்தித் தொடர்பாளர் டோமாஸ்ஸ்டேன்ச்லாந்த் கூறியுள்ளார்.
விடுதலை புலிகளின் ஆதரவு இணைய தளமான தமிழ் நெட் தெரிவித்திருப்பதாவது:
செவ்வாய்க்கிழமை மதியம் கோகாவில் அருக நடந்த வெடிகுண்டு விபத்தில் விடுதலைப் புலி ஒருவர்கொல்லப்பட்டார். 2 பேர் காயமடைந்தனர். இவர்கள் தமிழச்செல்வனுக்கு பாதுகாப்பாக சென்று கொண்டிருந்தார்என தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்த விபத்தில் தமிழ்ச்செல்வன் காயமடைந்தாரா என்பது பற்றி எதுவும்தெரிவிக்கப்படவில்லை.
செவ்வாய்க்கிழமை நார்வே தூதுக்குழு தலைவர் எரிக் சோல்ஹேம் இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவையும், அமைச்சர் லட்சுமண் கதிர்காமரையும், எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசினார்.நார்வே தூதுக்குழுவினர் வியாழக்கிழமை மாலவி செல்வார்கள்.
இந்த வெடிவிபத்துக்கு இலங்கை ராணுவம்தான் காரணம் என இணையத்தளத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.ஆனாலும் இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சனாத் கருணாரத்னே கூறுகையில், ராணுவத்திற்கும், இந்தசம்பவத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றார்.
நார்வே தூதுக்குழுவினர் இந்த முறை நடத்தவுள்ள பேச்சு வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்படுகிறது.இந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கை அரசும், விடுதலை புலிகளும் தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டால் அமைதிப் பேச்சுவார்த்தை துவங்கும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.