ஜெ. மீதான வருமான வரி வழக்கு ஒத்திவைப்பு
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது நிலுவையில் இருக்கும் வருமானவரி வழக்கின் விசாரணை இந்த மாதம் 21ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதா மீது வருமான வரித்துறையினரால் சென்னை 1வது குற்றவியல்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து விட்டது. இறுதி கட்ட விசாரணைக்காக சென்ற மாதம் 24ம் தேதிஜெயலலிதா ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
ஜெயலலிதா அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் இருந்ததால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்தவழக்கு விசாரணைக்காக ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு எழும்பூர் 1வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 1வதுகுற்றவியல் மாஜிஸ்திரேட்டு விடுமுறையில் இருந்ததால் வழக்கு விசாரணையை 2வது நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுபெருமாள் விசாரணை செய்தார்.
செவ்வாய்க்கிழமையும் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஜெயலலிதா சார்பில் ஆஜரான அவரதுவழக்கறிஞர் ஜோதி, இந்த வழக்கில் முன்னர் விசாரிக்கப்பட்ட 3 சாட்சிகளை மீண்டும் விசாரிக்க அனுமதிக்கவேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
ஆனால் இதற்கு வருமான வரித்துறை வழக்கறிஞர் ராமசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில்,ஜெயலலிதா இந்த நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவு அப்படியே இருக்கிறது. அதற்கு முதலில்பதிலளிக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து மாஜிஸ்திரேட்டு பெருமாள் இந்த வழக்கு விசாரணையை இந்த மாதம் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்துஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications