தேர்தல் முடிவு குறித்து இ.கம்யூ. ஆலோசனை
சென்னை:
இடது கம்யூனிஸ்டு கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் வெற்றி,தோல்விக்கான காரணங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை சென்னையிலிருக்கும் கட்சியின்தலைமையகத்தில் நடைபெற்றது.
மாநில செயற்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். மாநில செயலாளர் சங்கரய்யாமுன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
செயற்குழு கூட்டம் முடிந்தபின் நிருபர்களுக்கு பேட்டியளித்த சங்கரய்யா கூறியதாவது:
செயற்குழு கூட்டத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிஆற்றிய பணிகள், வெற்றி தோல்விக்கானகாரணங்கள், கட்சி எதிர்காலத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்த பணித்திட்டங்கள் பற்றிஆலோசனை செய்யப்பட்டது.
தமிழக இடது கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் கூட்டம் விரைவில் நடக்கவிருக்கிறது. இந்த கூட்டம் சென்னையில்நடைபெறும். இதில் தமிழக சட்டசபை கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தமிழக தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்ததுதான். ஜெயலலிதா முதல்வரானதற்கு நாங்கள் நேரில் சென்றுவாழ்த்து தெரிவித்தோம்.
இன்னும் 6 மாதங்களுக்குள் ஜெயலலிதா எம்.எல்.ஏ. ஆகவேண்டும். அதற்கான முயற்சிகளை ஜெயலலிதாமேற்கொள்வார். ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்ற கருத்தை மக்கள் தேர்தல் முடிவு மூலம்தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி கூறிய எதையும் மக்கள் ஏற்கவில்லை. கருணாநிதி தலைமையில் தி.மு.க நல்ல எதிர்க்கட்சியாகசெயல்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications