சத்துணவுக் கூடம் இடிந்து விழுந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் சத்துணவுக் கூடம் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சென்னை தேனாம்பேட்டை அருகே உள்ளது புலவர் நக்கீரன் நகர். இங்குள்ள பள்ளியொன்றில் தமிழக முதல்வர்சத்துணவுக் கூடம் உள்ளது. இங்கு வழக்கம் போல புதன்கிழமை காலை சத்துணவு ஊழியர்கள், உணவு சமைத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது காலை 11 மணியளவில் திடீரென சத்துணவுக் கூடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பிறகுசடசடவென கூடமே இடிந்து விழுந்தது. சத்துணவுக் கூடம் இடிந்து விழுந்ததும் உடனடியாக அங்கிருந்தஊழியர்கள் வெளியேறி விட்டனர்.
கூடம் இடிந்து விழுந்தபோது, மாணவர்கள் யாரும் அப்பகுதியில் இல்லை. வெளியே விளையாடிக்கொண்டிருந்தனர். இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சம்பவம் குறித்து அறிந்ததும் தேனாம்பேட்டை போலீஸார் விரைந்து வந்து இடிபாடுகளை அப்புறப்படுத்தும்பணியை மேற்கொண்டார்கள்.












Click it and Unblock the Notifications