For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பவர் கட்: இருளில் மூழ்கியது சென்னை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் திங்கள்கிழமை ஏற்பட்ட மின்சாரதடை காரணமாக சென்னை மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.மின்சார ரயில்களும் ஓடவில்லை.

சென்னைக்கு அருகில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் திங்கள்கிழமைமாலை திடீரென் பழுது ஏற்பட்டது.

இதன் காரணமாக வடசென்னையில் அமைந்திருக்கும் பவர் அவுசில் இருக்கும் மின் உற்பத்தி இயந்திரமும், பேசின்பிரிட்ஜ் ஜி.எம்.ஆர்.வாசவி மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள இயந்திரமும் செயல்படவில்லை.

இதனால் இந்த இடங்களிலிருந்து சென்னைக்கு விநியோகிக்கப்படும் மின்சாரம் தடைபட்டது. இதன் காரணமாகசென்னை நகரில் மாலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை மின்சாரம் இல்லாமல் சென்னை நகரமே இருளில்மூழ்கியது.

மின்சார ரயில்களும் மின்தடை காரணமாக பாதி வழியில் நின்றதால், அதில் பயணம் செய்த பயணிகளும் பெரும்அவதிக்குள்ளானார்கள்.

சென்னையிலிருந்து கிளம்பும் ரயில்கள் சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. ஸ்ரீபெரும்புதூர்டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு சென்னை நகரின் சில பகுதிகளுக்கு இரவு 7 மணிக்குமின்சாரம் வந்தது.

சென்னை நகரில் மின்சாரம் தடை பட்டிருந்த நேரத்தில்தான் முதல்வர் ஜெயலலிதா பதவியேற்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X