சென்னையில் கார் விபத்தில் 3 பேர் பலி
சென்னை:
சென்னை சைதாப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு கார் பாலத்திலுள்ள சாலைத் தடுப்பு மீது மோதியதில்அதில் பயணம் செய்த 3 பேர் இறந்தனர்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் சுதர்சன் (43). தொழிலதிபராக உள்ளார். இவரது சிங்கப்பூர் நண்பர்கள் லூயில்செல்லையா, மாணிக்கம் ராம்சந்த், ராமானுஜம் ஆகியோர் விடுமுறையில் சென்னைக்கு வருவதாகதெரிவித்திருந்தனர்.
இதையடுத்து நண்பர்களை விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்பதற்காக செவ்வாய்க்கிழமை இரவுமீனம்பாக்கம் சென்றார். விமான நிலையத்தில் நண்பர்களை அழைத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது சைதாப்பேட்டை அருகே கார் வந்தபோது, ஒரு முதியவர் சாலையைக் கடக்க முயற்சித்தார்.
அப்போது கார் அவர் மீது மோதி விடாமல் தவிர்ப்பதற்காக டிரைவர் செந்தில்வேல் வலது பக்கம் காரைத்திருப்பினார். அப்போது நடுவில் இருந்த சாலைத் தடுப்பு மீது கார் மோதி விழுந்தது.
இதில் சுதர்சன் அங்கேயே இறந்தார். டிரைவர் செந்தில்வேல், லூயிஸ் செல்லையா ஆகியோர் படுகாயமடைந்தனர்.அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இருவரும் இறந்தனர்.