பாண்டி.: முதல்வரைத் தேர்ந்தெடுக்க காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாண்டிச்சேரி மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வியாழக்கிழமை கூடி தங்களது சட்டசபைக் கட்சித் தலைவரைதேர்ந்தெடுக்கின்றனர்.

பாண்டிச்சேரியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன்கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எந்தக் கட்சிக்கும்பெரும்பான்மை பலம் கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமையவே அங்கு வாய்ப்பு அதிகம்.

அதிமுக 3 இடங்களில் அங்கு ஜெயித்துள்ளது. அதன் ஆதரவை கோரி காங்கிரஸ் கட்சி மேலிடம் தனதுபிரதிநிதியாக பிரணாப் முகர்ஜியை சென்னைக்கு அனுப்பி வைத்தது.

புதன்கிழமை சென்னை வந்த முகர்ஜி, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவைச்சந்தித்து ஆதரவு கோரினார். ஜெயலலிதாவும் நிபந்தனையற்ற ஆதரவைத் தருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து பாண்டிச்சேரியில் ஆட்சி அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சிஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்வியாழக்கிழமை கூடுகின்றனர்.

இக்கூட்டத்தில் சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார். அதன் பிறகு இந்த முடிவுஆளுநருக்குத் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் ஆளுநரின் அழைப்பின் பேரில் புதிய முதல்வர்பதவியேற்பார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+