தோல்விக்காக பயப்பட மாட்டேன் .. ஆலடி அருணா
சென்னை:
தோல்வி கண்டு பயப்படாதவன் நான். எனது பொது வாழ்க்கை தொடரும் என்று சட்டசபைத் தேர்தலில் தோற்றமுன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கூறியுள்ளார்.
திமுக அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தவர் ஆலடி அருணா. இவரது முழுப் பெயர் ஆலடிப்பட்டிஅருணாச்சலம். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், ஆலங்குளம் தொகுதியில் திமுக வேட்பாளராகபோட்டியிட்டுத் தோல்வியுற்றார்.
தனது தோல்வி குறித்து ஆலடி அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தோல்வி எங்களுக்குப்பேரதிர்ச்சியை அளிக்கிறது. இந்தளவு மோசமான தோல்வியை சந்திப்போம் என தேசிய ஜனநாயக முன்னணிக்கட்சித் தலைவர்கள் எதிர்பார்க்கவில்லை.
அதிமுக அணியினருக்கே கூட இது நம்ப முடியாத விஷயமாகத்தான் இருக்கிறது. பத்திரிக்கையாளர்கள்,பொதுமக்கள் என யாருமே எதிர்பாராத அளவு எங்கள் தோல்வியும், அவர்களது வெற்றியும் அமைந்து விட்டது.
ஆலங்குளம் தொகுதியில் நான் தோல்வியுற்றுள்ளேன். ஆனாலும் ஊழல் சக்தியை விரட்ட வேண்டும், கலைஞரின்பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் எனக்காக வாக்களித்த 54,387 வாக்காளர்களுக்கும் எனதுநன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வார்த்தைக்கு மதிப்பளித்து என் பொது வாழ்வு தொய்வின்றி தொடரும். என்கடன் பணி செய்து கிடப்பதே என்ற லட்சியத்துடன் தொடர்ந்து செயல்படுவேன் என்று அவர் கூறியுள்ளார்.