For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிலிப்பைன்சில் 2 ஹெலிகாப்டர் விபத்துகளில் 13 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

மணிலா:

பிலிப்பைன்சில் நடந்த 2 ஹெலிகாப்டர் விபத்துகளில் 13 பேர் பலியாயினர்.

தனியாருக்குச் சொந்தமான ஒரு ஹெலிகாப்டர், பாலவான் தீவில் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த 6பேரும் கொல்லப்பட்டனர்.

இவ்விபத்தில் இறந்தவர்களின் உடல்களைத் தேடிச் சென்ற பிலிப்பைன்ஸ் விமானப்படை ஹெலிகாப்டரும்விபத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் இந்த ஹெலிகாப்டரில் இருந்த 7 மீட்புப்படை வீரர்களும் இறந்தனர்.

விபத்துகளுக்கான காரணங்கள் குறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருவதாக பிலிப்பைன்ஸ் விமானப்போக்குவரத்துத் துறை இணைச் செயலாளர் எடில்பெர்டோ யாப் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X