குக்கிராமங்களை மேம்படுத்த வருகிறது புதிய அமைப்பு
கோவை:
குக்கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அகில இந்தியசேவா சங்கம் என்ற அமைப்பை ஆர்ஷா வித்யா குருகுலத்தின் தயானந்த சரஸ்வதிசுவாமிகள் துவங்கியுள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவில் ஏரளமான குக்கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. இந்த கிராமங்களுக்கு மக்கள் சென்று வருவதே அபூர்மாகஉள்ளது.
எனவே இத்தகைய கிராமங்களைக் கண்டறிந்து, அங்கு அடிப்படை வசதிகளைமேம்படுத்துவதற்காக அகில இந்திய சேவா சங்கம் என்ற அமைப்பத்தொடங்கியுள்ளோம்.
ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்த பட்சம் 50 கிராமங்களைத் தத்து எடுத்து, அவற்றின்சீரமைப்பு பணியில் இந்த அமைப்பு ஈடுபடும்.
குடிநீர், சத்துணவு, சுற்றுச்சூழல், சுகாதாரம், பண்பாடு ஆகியவற்றை மேம்படுத்தும்பணியில் இந்த சேவா சங்கம் மேற்கொள்ளும்.
இந்த இயக்கம் ஒரு சுயசார்பு இயக்கம் ஆகும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள்இந்த அமைப்பிற்கு உதவினால் அதை ஏற்றுக் கொள்வோம். எதனையும், யாரையும்நம்பியிராமல் இவ்வியக்கம் சுயமாக செயல்படும்.
நம்மை நாமே நம்பியிருத்தல் நல்லது. அரசின் நிதியுதவித் திட்டங்களை இரண்டுஆண்டுகள் கழித்துப் பெறுவோம் என்றார் தயானந்த சரஸ்வதி சுவாமிகள்.












Click it and Unblock the Notifications