திருடனைக் கொன்ற 7 பேர் கைது
கோவை:
வீட்டின் கூரையைப் பிரித்து திருட முயன்ற திருடனை அடித்துக் கொலை செய்ததாக ஏழு பேரைப் போலீசார்கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில் அன்னூர் அருகே தேவம்பாளையம் உள்ளது. இந்த தேவம்பாளையத்தில் மே.18ம் தேதிஒரு திருட்டுக் கும்பல் வருவதாக தகவல் வந்தது. எனவே ஊர் மக்கள் விழிப்புடன் திருடர்களை எதிர்நோக்கியிருந்தனர்.
வெளியூரிலிந்து வருவோர் போவோரையெல்லாம் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில் பகலிலேயேஒருவர் தெய்வமணி என்பவரது வீட்டின் கூரை மீது ஏறி உள்ளே இறங்க முயற்சித்தனர். அப்போது ஊர்மக்கள்அவரைச் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் கட்டி வைத்து உதைத்தனர். இதனால் பலத்த காயமடைந்த அவர் இறந்து போனார். இந்த சம்பவம் குறித்துகிராம நிர்வாக அதிகாரி அவிநாசி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்த திருடனைக் கட்டிவைத்து உதைத்து கொன்றதாக 7 பேரைக் கைது செய்தனர்.