முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் மரணம்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
முன்னாள் தி.மு.க அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் செழியன் காலமானார்.
தி.மு.க அமைச்சரவையில் விவசாயத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். இவரது மூத்த மகன்நெடுஞ்செழியன் என்ற செழியன்.
இவர் சேலம் மேற்கு மாவட்ட செயலராகவும், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகவும் உள்ளார். மேலும், சேலம்மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்தார்.
இந்நிலையில் அவர் உடலமின்றி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஆற்காடு வீரசாமி, மற்றும் பொன்முடி ஆகியோர் சென்று செழியன்உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் சொந்த ஊரான பூலவாரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இறுதிச் சடங்கிற்குப் பிறகுஅடக்கம் செய்யப்படும்.












Click it and Unblock the Notifications