கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார் காளிமுத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அ.தி.மு.க அவைத் தலைவர் பதவியை கா.காளிமுத்து ராஜினாமா செய்து விட்டார்.
தமிழக சட்டசபை சபாநாயகராக காளிமுத்து தேர்வு செய்யப்படவுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை முதல்வரும்,அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சமீபத்தில் அறிவித்திருந்தார்.
சபாநாயகர் பொறுப்பில் அமருகிறவர்கள் கட்சி சார்பானவர்களாக இருக்கக் கூடாது. எனவே அ.தி.மு.க. அவைத்தலைவர் பதவியை காளிமுத்து ராஜினாமா செய்து விட்டார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ராஜினாமா கடிதத்தை காளிமுத்து அனுப்பினார்.அதை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார்.
இத்தகவல் அ.தி.மு.க .வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications