மின் நிலைய ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நெய்வேலி அனல் மின் நிலைய தொழிலாளர்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தைத் தொடங்கினர்.
ஊதிய விகிதத்தை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி அனல் மின் நிலையதொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக அடையாள போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் அவர்களதுகோரிக்கைக்கு பதில் ஏதும் கிடைக்காததால், திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தைத் துவக்கினர்.
இதன் காரணமாக தமிழகம் முழுவதிலும் மின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் மின் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. தற்போது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிலாளர்கள்துவங்கியுள்ளதால் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications