காஷ்மீரில் சண்டை நிறுத்தம்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
டெல்லி:
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் முடிவுசெய்ப்படும் என தெரிய வந்துள்ளது.
காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டு ரம்ஜான் முதல் அங்கு சண்டைநிறுத்தத்தை அறிவித்தது மத்திய அரசு. அந்த சண்டை நிறுத்தம் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சண்டை நிறுத்தம் இந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடையவிருப்பதால் சண்டை நிறுத்தத்தை மேலும்நீடிக்கலாமா என மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.
காஷ்மீரில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையை நேரில் சென்று ஆராய மத்திய உள்துறை அமைச்சர்அத்வானியும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் சனிக்கிழமை காஷ்மீர் சென்றிருந்தனர்.
அப்போது அவர்கள் ஸ்ரீநகரில் ராணுவ அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதன்கிழமை நடக்கவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் தாங்கள் சேகரித்து விவரங்களை அத்வானியும், ஜஸ்வந்த்சிங்கும் பிரதமரிடம் கூறுவார்கள்.
சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் எல்லைப் பகுதியில் அமைதி நிலவி வருகிறது. ஆனால் தீவிரவாதிகள்தாக்குதலில் இறந்து போன பொதுமக்கள் எண்ணிக்கை 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது என உளவுத்துறை தகவல்கள்தெரிவிக்கின்றன.
தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதால் சண்டை நிறுத்தத்தை மேலும் நீடிக்கவேண்டும் என மத்திய அரசு விரும்புவதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications