எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 7 ராணுவ வீரர்கள் சாதனை
டெல்லி:
உலகிலேயே மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 7 இந்திய ராணுவ வீரர்கள் சாதனைபடைத்துள்ளனர்.
இந்த 7 ராணுவ வீரர்களும் புதன்கிழமை காலை 7.20 மணிக்கு எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டார்கள் என்றுராணுவம் தெரிவித்துள்ளது.
அவர்கள் பெயர்: கேப்டன் ஷேக்வத், சுபேதார் அமர் பிரகாஷ், ஹவ் மொஹிந்தர் சிங், ஹவ் நீல் சந்த், சஞ்சல் சிங்,புத்ததோகி, பால்டன் ஜியாகோ.
இவர்கள் அனைவரும் டெல்லியிலிருந்து கடந்த மார்ச் மாதம் 1 ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தைத் தொடுவதற்காகக்கிளம்பிச் சென்றனர்.
ராணுவ வீரர்கள் 7 பேர் எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஏறி சாதனை படைப்பது இதுவே முதல் முறையாகும்.
கடந்த 1985 ம் ஆண்டு ராணுவ வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட முயன்றனர். ஏனெனில் அந்த ஆண்டுஅவர்கள் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட முயற்சித்த போது, காலநிலை மிகவும் மோசமாக இருந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications