For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகள் கண்ணிவெடியில் சிக்கி 15 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் கடற்படைக்குச் சொந்தமான பஸ் கண்ணி வெடியில் சிக்கியதில் கடற்படை வீரர்கள் உள்பட 15 பேர்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறியதாவது:

திரிகோணமலைப் பகுதியில் புதன்கிழமை கடற்படைக்குச் சொந்தமான பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதுவிடுதலைப்புலிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கியது. இதில் அந்த பஸ் வெடித்துச் சிதறியது.

இந்தச் சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த கடற்படை வீரர்களும், கடற்படையினர் அல்லாதோரும் உயிரிழந்தனர்.வெடித்துச் சிதறிய பஸ் முழுவதும் வீரர்களின் சடலங்களும், சதைத்துண்டுகளுமாகக் காட்சியளித்தன.

பொதுவாக கடற்படை வீரர்கள் அப்பகுதி வழியே செல்லுமுன் ரோந்துப் போலீஸார் அப்பகுதியில் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுவர்.

சாலை பழுது பார்க்கும் பணி நடந்து கொண்டிருந்ததால் அப்பகுதியில் போலீஸார் பரிசோதனை செய்யவில்லைஎன்றார்.

விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்து வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வரும்பணியில் நார்வே தூதர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் இந்தக் கண்ணிவெடித் தாக்குதல் நடந்துள்ளது.

இதற்கிடையே நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவிடமும்,விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடனும் முதல் சுற்றுப் பேச்வார்த்தையை முடித்து விட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X